July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தீர்மானிக்கவில்லை என்கிறார் மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தீர்மானிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று உருவாகுவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக வெளியான செய்தியை மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

நாளை சுதந்திர கட்சியின் 70 வருட பூர்த்தி கொண்டாடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.