முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை தனது 70 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாவுள்ளது.
அதனை தொடர்ந்து புதிய கூட்டணி தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதங்களில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பல்வேறு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கமைய ஐக்கிய முன்னணி அல்லது மக்கள் முன்னணி என்ற பெயரை உள்ளடக்கியதாக அந்தக் கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. 10 ற்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.