June 12, 2025 12:02:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பின்னவல சரணாலயத்தில் பிறந்த இரட்டை யானைக் குட்டிகள்

இலங்கையின் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானைக் குட்டிகள் பிறந்துள்ளன.

இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது இரட்டை யானைக் குட்டிகள் பிரசவம் இதுவாகும்.

பின்னவல சரணாலயத்தில் இருந்த ‘சுரங்கி’ எனும் யானையே இரட்டைக் குட்டிகளை பிரசவித்துள்ளது.

‘சுரங்கி’ முதலாவது குட்டியை இன்று அதிகாலை 4 மணிக்கும் இரண்டாவது குட்டியை காலை 10 மணிக்கும் பிரசவித்துள்ளது.

பின்னவல யானைகள் சரணாலயம் என்பது இலங்கையின் அநாதை மற்றும் ஊனமுற்ற யானைகளைப் பராமரிக்கும் இடமாகும்.

யானைக் குட்டிகளும் தாயும் நலமாக இருப்பதாக பின்னவல யானைகள் பராமரிப்பு சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.