July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த மக்களுக்கு சுதேச ஒளடதங்களை வழங்கத் தீர்மானம்!

இலங்கையில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த சுதேச ஒளடதங்களை மக்களுக்கு விநியோகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் உள்ளடக்கியதாக நோய் எதிர்ப்புச் சக்தி ஒளடதங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மூலிகைப் பானத்தை வழங்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆயுர்வேத திணைக்களத்தின் வேதியல் சூத்திரக் குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள மூலிகைகளை நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வருமானம் இழந்த 25 இலட்சம் குடும்பங்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஏனைய குடும்பங்களுக்கும் வழங்குவதற்காகவும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.