June 13, 2025 6:55:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நேற்று அதிகளவிலானோருக்கு தடுப்பூசி!

vaccination New Image

இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினத்தில்  571,589 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஒரே நாளில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்றைய தினத்தில் 536,438 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகளும், 12,604 பேருக்கு அஸ்டா செனகா தடுப்பூசிகளும், 20,873 மொடோர்னா தடுப்பூசிகளும், 1,674 பேருக்கு பைசர் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.