July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி, அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒரு மாதத்துக்கு அதிகமான காலமாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், குறித்த பிரச்சினையை ஆராய அமைச்சர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரனதுங்க, மகிந்த அமரவீர மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை உப குழு  நிதி அமைச்சரிடம் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

இந்த பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தில் இருந்து பல கட்டங்களாக இந்த பரிந்துரைகள்  நடைமுறைப்படுத்தப்படும் எனவும்  அமைச்சரவை தெரிவித்துள்ளது.

அதுவரையில் மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.