October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு மூடப்பட்டது

வெளிவிவகார அமைச்சின் கொழும்பிலுள்ள கொன்சியூலர் பிரிவு இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொன்சியூலர் பிரிவினால் முன்னெடுக்கப்படும் சகல சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றும் பரவும் அபாய நிலைமையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.