![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/UN_HumanRightsCouncil-UN-PhotoJean-Marc-Ferree-e1600773153837-1400x934-1-e1612038216111.jpg?fit=1024%2C572&ssl=1)
ஜெனிவா தீர்மானம் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கையெடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரையும் மற்றும் ஐநா மாநாட்டையும் இதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஜெனிவா கூட்டத் தொடர் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்போது கொழும்பில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.