June 12, 2025 9:23:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுற்றுலா பயணிகளை அழைத்து வர நடவடிக்கை

இஸ்ரேல்,ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ‘த சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் பிரான்ஸிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அதிக கொரோனா பதிவாகும் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும்.இஸ்ரேலில் நாளாந்தம் சுமார் 7,500 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.