July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை ஆதிவாசிகள் தலைவரின் குடும்பத்தினருக்கு கொவிட் தொற்று

மஹியங்கனை – தம்பானே ஆதிவாசிகள் கிராமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹியங்கனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் ஆதிவாசிகளும், சாதாரண மக்களும் உள்ளடங்குவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் கடந்த 27 ஆம் திகதி  115 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மஹியங்கனை மருத்துவமனையின் கொரோனா  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.