July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘186 கொரோனா தொற்றாளர்கள் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதி’

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 186 பேர் இதுவரை அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) வரை 942 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் உதவியுடன் சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய் தாக்கங்களுக்கு உள்ளான 4,347 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.