July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்துக்குள் படகில் நுழைந்த இலங்கை குழு; கேரள கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தல்

இலங்கையர் குழுவொன்று தமிழகத்திற்கு மீன்பிடி படகுகளில் பயணம் செய்திருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து கேரள கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலோர பொலிஸாருடன், கடலோர காவல் படையினர் இணைந்து இந்த ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தை அடைந்த பிறகு, அவர்கள் சாலை வழியாக கொச்சிக்கு செல்லலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பிந்திய தகவல்களின்படி மீன்பிடி படகுகளில் வெளிநாட்டிற்கு பயணம் செய்வது அவர்களின் நோக்காக இருக்கும் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.