ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கொவிட்-19 பேரிடர் கால இரத்ததான நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வடமராட்சி, உடுப்பிட்டி தொகுதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளர் கே.சிவராம், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர், உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.