May 29, 2025 6:39:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி பண மோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது!

பெண்களின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மற்றும் அங்கொடவில் வசிக்கும் 20 மற்றும் 23 வயதுக்குட்பட்ட இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

குறித்த இருவரும் பேஸ்புக் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.