July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி மரணம்

இலங்கையின் கடவத, எல்தெனிய பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த வீட்டின் மேல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து 57 வயதுடைய கணவன் மற்றும் 53 வயதுடைய மனைவி ஆகியோர் தீக்காயங்களுடன் மரணித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக களனி குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடவத பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.