July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் அமுலில் உள்ள ஊரடங்கின் தோல்வியை வீதிகளில் காணலாம்’: சஜித் பிரேமதாஸ

ஊரடங்கு உத்தரவை விதித்து நாட்டை மூடிவிட்டதாக அரசாங்கம் அறிவித்தாலும், அத்தியாவசியமற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதைக் காணும் போது, ஊரடங்கின் தோல்வி தெளிவாகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யுங்கள் என்று அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவைவிட இலங்கையின் மரண எண்ணிக்கை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள சிலர் கொரோனா வைரஸை ஒரு சிறிய தடுமல் போன்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை சஜித் கண்டித்துள்ளார்.

அரசாங்கம் மக்கள் மீதான பொறுப்பை மறந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையை மக்களுக்கு எட்டாத அளவுக்கு உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.