July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு செப்டம்பர் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது

இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்க கொவிட் தடுப்பு தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கூடிய கொவிட் தடுப்பு தேசிய செயலணியின் கூட்டத்தில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வர இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் சுகாதார கட்டுப்பாடுகளைப் பேணி, பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.