June 14, 2025 13:16:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பிரமித்த பண்டார தென்னகோன் எம்.பி. நியமனம்

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இன்று அலரி மாளிகையில் வைத்து வழங்கி வைத்துள்ளார்.

2021 செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவின் செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ண ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.