October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில்.சகோதரர்கள் இருவரின் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம்,வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத் தலைவர் ஒருவர் காணி தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் இன்று (25) காலை அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.அது பின்னர் கைகலப்பாக மாறியது.

இதன்போது மரணமடைந்த நபரும் அவரது மகளும் அயல் வீட்டுக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்த மகளும் குறித்த நபரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ளவரின் வயல் காணியை சகோதரர்கள் இருவர் பராமரித்து வருகின்றனர்.இன்றைய தினம் அந்தக் காணியில் மற்றொருவர் உள்ளதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்று முரண்பட்டதுடன், கம்பியாலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மக்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் இராசநாயகம் ரெஜியானந்தன் (வயது 49) என்பவரே மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.