![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/Saif-Alanofy-700x375-1.jpg?fit=700%2C375&ssl=1)
நீண்ட கால கடன் வசதியின் கீழ் பெட்ரோலியம் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இரான் ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.
இதன்படி இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரக பதில் பிரதானி சைஃப் அலனோபியுடனும் மற்றும் இரான் தூதுவர் ஹசீம் அஸ்ஜாஷாடே ஆகியோரை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆகஸ்ட் 23 ஆம் திகதி இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அமைச்சர் கம்மன்பில தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.