![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/80d333d5099a5c614c703b7dd4412d31a1f031b5-e1629815829750.jpg?fit=596%2C350&ssl=1)
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று மாலை கொழும்பு பொரளை மயானத்தில் இடம்பெற்றது.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று காலை காலமானார்.
இதனையடுத்து சுகாதார நடைமுறைகளுக்கமைய இன்றைய தினத்தில் அவரின் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டு, அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதன்போது அவரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போதும், இறுதிக் கிரியை நடந்த இடத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.