July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மங்கள சமரவீர நன்றியுள்ள அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்’: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்தி, இலங்கை மக்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கத் தீவிரமாகப் பங்களித்து, நன்றியுள்ள அரசியல்வாதியாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் திடீர் மறைவுச் செய்தி வருத்தம் அளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவையொட்டி, ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கலில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும் இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

தன்னுடன் நெருங்கி செயற்பட்ட மங்கள சமரவீர, தனது அரசியல் நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றியதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர எனும் போராளியின் இழப்பு கவலை தருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் உருவான முற்போக்கு அரசியல்வாதி என குறிப்பிடக்கூடிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவு தனக்கு அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட அரசியல் பயணத்தில் தான் நம்பும் கோட்பாட்டுக்கு அமைவாக, எவ்வாறான தடைகளுக்கு மத்தியிலும் எதிர் நீச்சல் போடும் அரிதான அரசியல்வாதியாவார் என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.