![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/Bandaranaike-International-Airport.jpg?fit=872%2C533&ssl=1)
இலங்கையர்கள் உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை, இந்தியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இவ்வாறு சுற்றுலா வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடுகளுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முதல் கட்டமாக ஐக்கிய அரபு இராச்சியம் இந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
இதனிடையே, எத்திஹாட் ஏர்லைன்ஸ் இன்று முதல் இலங்கை மற்றும் துபாய் இடையே விமான சேவையை தொடங்கியுள்ளது.
அனைத்து பயணிகளும் கொவிட் -19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என எத்திஹாட் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.