July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடுபவர்களிடம் யாழில் கொரோனா பரிசோதனை!

இலங்கை முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ். நகரின் வீதிகளில் நடமாடியவர்கள் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

யாழ். மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கும் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக செல்பவர்களுக்கும் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த யாழ். நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.