May 29, 2025 23:47:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதார மத்திய நிலையங்களை இரண்டு நாட்களுக்கு திறக்க நடவடிக்கை

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரண்டு நாட்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர  ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.