July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு!

vaccination New Image

இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக சுகாதார துறையினருக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நாடு முழுவதும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.