July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறிய 452 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவை மீறி வீதிகளில் பயணித்த மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 452 பேர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 2020 ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 56,294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், மேலும் மூவாயிரம் பேருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.