June 12, 2025 22:26:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்ற சந்நிதியான் திருவிழா!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா இன்று இடம்பெற்றது.

விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று ஆலய உள்வீதியில் தேர் வலம் வந்தது.

நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் ஆலயங்களுக்கு என வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் தேர் உற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.