May 14, 2025 16:55:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாழ்.மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது’: அரச அதிபர் தகவல்

யாழ்.மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாக அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்புவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவின்படி யாழ்.மாவட்டத்திற்கு தேவையான எரி பொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.