July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில்!

Lockdown or Curfew Common Image

நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி கொவிட் செயலணியில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டை முடக்கினாலும் அத்தியாவசிய சேவைகள் வழமைப் போன்று முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டை ஒருவாரத்திற்காவது முடக்க நடவடிக்கையெடுக்குமாறு மகாநாயக்க தேரர்களினால் நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.