February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் இரத்த தானம்

கொரோனா காலத்தில் ஏற்படும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ். மாவட்ட இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடிதுவக்கு தலைமையில், வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது 200 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குருதி தானம் செய்தனர்.

இதன்போது பெறப்பட்ட குருதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தராஜா முன்னெடுத்துள்ளார்.