![Lockdown or Curfew Common Image](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/Lockdown-or-Curfew-new-Common.jpg?fit=1024%2C576&ssl=1)
இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால் நாட்டை ஒருவார காலத்திற்காவது முடக்க நடவடிக்கையெடுக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அந்தப் பீடங்களின் மகாநாயக்க தேரர்களினால் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இன்றைய தினம் இது தொடர்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றால் முழுநாட்டு மக்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதால் அவர்களை பாதுகாப்பதற்காக விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய குறைந்தது ஒரு வாரத்திற்காவது நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி, பிரதமரை அந்தக் கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.