February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தொழிலுக்காக வெளியில் செல்ல தடைகள் கிடையாது”: இராணுவத் தளபதி

இலங்கையில் நேற்று முதல் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசேட சுகாதார ஒழுங்குவிதிகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதற்கமைய வீட்டில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தொழிலுக்கு செல்வோர் எந்தவித தடையும் இன்றி செல்ல முடியும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முறையாக சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி தொழிலிடங்களில் பணியாற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவையுடன் தொடர்புடையவர்களை தவிற வேறு எவருக்கும் மாகாணங்களுக்கு இடையே பயணிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.