
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 முதல் 2014 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார்.அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியுடன் பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரித்ததுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை இலங்கை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
Spoke to the Former President of #Afghanistan @KarzaiH to inquire about the ongoing developments unfolding in his country and reaffirmed #SriLanka’s continued support to the People of Afghanistan. pic.twitter.com/nXnYsQGXS5
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 18, 2021