![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/IMG-20210818-WA0000.jpg?fit=1024%2C766&ssl=1)
மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட முந்தனை ஆற்றுப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படை சிற்பாய் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்
புதன்கிழமை (18) காலை 6.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மணல் அகழ்வு அனுமதிப் பத்திர விதிகளை மீறி உழவு இயந்திரந்தில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படை சிற்பாய் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கரடியனாறு இலுப்படிச் சேனையைச் சேர்ந்த 26 வயதான முருகையா சசிக்குமார் என்பவரே சம்பவத்தில் காயமடைந்து செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.