July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்துக்கும் எங்களுக்குமிடையில் எந்த இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை; செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும், எங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் எந்த இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் புரிந்துணர்வை எட்டியுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொற்றுநோய் காரணமாக வட மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதேபோல்,தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாங்கள்பேசியுள்ளோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி விவாதிக்க நாங்கள் விரைவில் அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.