July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையர் இருவர் உயிரிழப்பு!

File Photo

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம – சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றவர்கள் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாலர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர்கள், சூரியவெவ பகுதியில் இன்று மாலை வீதியில் பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்வது தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் சந்தேக நபர்களை ஜீப் வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது கொள்ளையர்கள் பொலிஸ் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், இதன்போது பதிலுக்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த சம்பவத்தின் போது குறித்த பொலிஸ் ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் மரமொன்றில் மோதி விபத்துக்கு உள்ளானத்தில் பொலிஸார் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.