July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தடுப்புக்குரிய ஒரே வழி தடுப்பூசி ஏற்றமாகும்’: அமைச்சர் கெஹெலிய

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதாகும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு ஏன் முடக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் கொரோனா தடுப்புக்கான வழியாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பொருளாதார பலம் கொண்ட நாடுகளும் நாட்டை முடக்காமல் தொற்று நோய்க்கு முகங்கொடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா தடுப்புக்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.