July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பள்ளிவாசல்களில் ஜும்ஆத் தொழுகை, ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

பள்ளிவாயல்களில் ஐவேளை தொழுகை, ஜும்ஆத் தொழுகை மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் வரை மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து கூட்டு பிரார்த்தனைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினர் மற்றும் வக்பு சபையினால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கு அமைய, இந்த அறிவிப்புகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கையினூடாக வெளியிட்டுள்ளது.