July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் பாழடைந்த கிணற்றுக்குள் பாயில் சுற்றிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் பாயில் சுற்றிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் காணப்படுவதால் குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

குறித்த சடலம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் ஊடாக நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சடலம் தொடர்பில் தீவிர விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.