June 14, 2025 7:53:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கான் தலைநகர் காபூலில் பணிபுரியும் இலங்கையர்களை அழைத்துவர அரசாங்கம் முடிவு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்போதைய மோதல்களுக்கு மத்தியில் பணிபுரியும் இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

காபூலில் தற்போது சுமார் 50 இலங்கையர்கள் வேலை செய்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் தலைநகரை தலிபான் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.