July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேலும் 3 கொரோனா தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு அனுமதி

கர்ப்பிணி தாய்மார்களுக்கு எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மொடர்னா, பைசர் மற்றும் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளையும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றுவதற்கு மாத்திரமே பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 21 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான 700 கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, நாட்டில் இதுவரை 2800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.