May 27, 2025 22:10:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்!

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.

இதேவேளை பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் ராகேஷ் நட்ராஜ் மலர்தூவி மரியாதை செய்தார்.

இதன்போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கும் இந்திய அமைதிப்படையினருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வு நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.