![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-27-at-7.47.36-PM-e1606486784442.jpeg?fit=658%2C407&ssl=1)
நாட்டை முடக்குமாறு சுகாதார நிபுணர்களினால் உத்தியோகபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டால் அதனை செய்வதற்கு அரசாங்கம் தயார் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இதுவரையில் அவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு, கொவிட் தடுப்பு செயலணி ஆகியன செயற்படுகின்றன. அதற்கு வெளியே பல்வேறு ஆய்வு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் என்பனவும் உள்ளன. அவற்றின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டை முடக்கும் விடயத்தில் சுகாதார துறை உத்தியோகபூர்வமாக எங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவற்றை வழங்கினால் அதனை செயற்படுத்த அரசாங்கம் பின்வாங்காது என்று இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.