July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொட்டாஞ்சேனை,முகத்துவாரத்தில் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள்; தடுப்பூசி ஏற்றாதவர்களுக்காக ஏற்பாடு

கொழும்பில் வசிப்போருக்கு கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலய வளாகத்திலும், முகத்துவாரம் போன் ஸ்டார் மைதானத்திலும் பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகரசபையின் சுகாதார பிரிவும் இணைந்து முன்னெடுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று சனிக்கிழமை (14) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பில் வசிக்கும் இதுவரையில் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டோர் இந்த இரு இடங்களிலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தடுப்பூசி வழங்கும் அட்டைகளை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட வயதெல்லையிலுள்ள சகலரையும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.