May 28, 2025 22:15:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு முடக்கப்படுமா?: கொவிட் செயலணியில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டையும், மேலும் சில கட்டுப்பாடுகளையும் கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முடக்குவது குறித்த கோரிக்கள் தொடர்பில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடத்தப்பட்ட கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று மாலை இராணுவத் தளபதி விசேட அறிவித்தலொன்றை வெளியிடுவார் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.