June 15, 2025 13:11:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் நீர்வெட்டு தொடர்பான விசேட அறிவித்தல்!

கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்கு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.