நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரின் பங்குபற்றுதலுடன் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, ஆலயத்திற்கு முன்பாக பருத்தித்துறை வீதியில் பக்தர்கள் ஒன்றுகூடி நல்லூர்க் கந்தனை தரிசித்தனர்.
இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
இன்று கொடியேற்ற நிகழ்வின் போது, நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் பொலிஸாரின் பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினால் இரண்டு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.