June 12, 2025 20:08:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் ஆலயத்திற்கு முன்னால் பொதுமக்கள் பொலிஸாருக்கு இடையே முறுகல்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று காலை முறுகல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகும் நிலையில், ஆலய வளாகத்திற்குள் செல்ல குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவலை கருத்திற்கொண்டு சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஆலய முன்வாசலில் பொலிஸாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஆலய வளாகத்திற்குள் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதன்போது, கொடியேற்ற நிகழ்வினை பார்க்க ஆலயத்திற்கு சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.