July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்தியா,சிங்கப்பூரில் இருந்து ஒக்ஸிஜனை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானம்”

கொவிட் -19 நோயாளிகளுக்கு தேவையான ஒக்ஸிஜனை இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.

தற்போது அதிகாரிகளின் கையிருப்பில் இருக்கும் ஒக்ஸிஜனை சுகாதார அதிகாரிகள் கையாள முடியும் என்றாலும், எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.

ஒவ்வொன்றும் 20 -டன் கொள்ளளவு கொண்ட 12 திரவ ஒக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆறு நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நோயாளிகளின் திடீர் அதிகரிப்பு அநேகமாக டெல்டா மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.